உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் விலை சரிவு: விவசாயிகள் அதிருப்தி

வாழைத்தார் விலை சரிவு: விவசாயிகள் அதிருப்தி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலையும் சரிந்ததால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். தினசரி மார்க்கெட்டில் நேற்று (22ம் தேதி) செவ்வாழை கிலோ - 40, நேந்திரன் --- 25, பூவன் -- - 20, ரஸ்தாளி --- 40, கதளி --- 30, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட, தற்போது செவ்வாழை கிலோ - - 30, நேந்திரன் --- 5, பூவன் --- 17, ரஸ்தாலி -- 2 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் -- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை விட, நேற்று மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. விலையும் சரிந்தது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி