உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாட்டுக்கோழி வளர்ப்புக்கு வரும் 11ல் இலவச பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு வரும் 11ல் இலவச பயிற்சி

பொள்ளாச்சி: கோவை,சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவ., மாத பயிற்சியாக, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வரும், 11ம் தேதி காலை, 10:30 முதல் 4:00 மணி வரை நடைபெறும். இதில், நாட்டுக்கோழி ரகங்கள், வளர்ப்பு முறை, நோய் மேலாண்மை, உள்ளிட்ட அனைத்தும் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். சிலர் நாட்டுக்கோழி வளர்க்கின்றனர். இந்நிலையில், நாட்டுக்கோழி வளர்ப்பை மேலும் அதிகரிக்க இப்பயிற்சி கைகொடுக்கும். ஆர்வமுள்ளவர்கள், 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்,என, இம்மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை