மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டு விழா
02-Feb-2025
பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது.கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரி தலைமை வகித்தார். கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில், கடந்த, பிளஸ்,2 வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த இரண்டு மாணவர்களுக்கு தலா, 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு, 3 ஆயிரம், 3ம் இடம் பிடித்த மாணவருக்கு, 2 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.இதே போல, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு, தனியார் நிறுவனம் சார்பில், கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் கல்வி சேவையை பாராட்டி, நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.ஆண்டு விழாவை ஒட்டி நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், உதவி தலைமை ஆசிரியர் பிரகாஷ் பாபு, பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
02-Feb-2025