உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலக்காடுக்கு பச்சைக்கொடி.. கோவைக்கு சிவப்புக்கொடி.. தெற்கு ரயில்வே மீது அதிருப்தி

பாலக்காடுக்கு பச்சைக்கொடி.. கோவைக்கு சிவப்புக்கொடி.. தெற்கு ரயில்வே மீது அதிருப்தி

கோவை: பாலக்காடு கோட்டத்தின் கோரிக்கைக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் போது, சேலம் கோட்டத்துக்கு ஒப்புதல் வழங்காத, தெற்கு ரயில்வேயின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் ஈட்டித் தரும் ரயில்வே ஸ்டேஷனாக, கோவை ரயில்வே ஸ்டேஷன் இருந்து வருகிறது. ஆனால், கோவை மக்களின் கோரிக்கைகளுக்கு எப்போதும் தெற்கு ரயில்வே செவிசாய்ப்பதில்லை. சேலம் கோட்டத்தின் அருகில் உள்ள, பாலக்காடு கோட்டம் சார்பில் விடுக்கப்படும், அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், கோவை சார்பில் விடுக்கப்படும் அத்தியாவசிய தேவைகள் கூட நிராகரிக்கப்படுவதாக, ரயில்வே அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.இது குறித்து, போத்தனுார் ரயில் பயனர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:பாலக்காடு ரயில்வே கோட்டம் விடுக்கும், எந்த ஒரு கோரிக்கையும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் விரைந்து செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில், கோழிக்கோடு - பாலக்காடு இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை விடப்பட்டது. அதை செயல்படுத்த உடனடியாக தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. புதிய ரயில்கள் தவிர, சிறப்பு ரயில்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இது தவிர, ரயில்கள் நீட்டிப்பும் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்ட, பல ரயில்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவையில் இருந்து விடுக்கப்படும், எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படுவதில்லை. ரயில்களை நிறுத்த கோரிக்கை விடுத்தால் கூட நிறைவேற்றுவதில்லை. போத்தனுார் - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் முடிந்து, பல ஆண்டுகள் ஆகியும் இன்னும், கோவையிலிருந்து ராமேஸ்வரம், துாத்துக்குடி, கொல்லம், போடிநாயக்கனுார், ரயில்கள் இயக்கம் துவங்கப்படவில்லை. தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கை, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதில், கேரள மக்களின் ரயில்வே தேவைகள் நிறைவேற்றப்படுவது சரியே என்றாலும், கோவையின் ரயில்வே தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கோவையில் இருந்து விடுக்கப்படும், எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படுவதில்லை. ரயில்களை நிறுத்த கோரிக்கை விடுத்தால் கூட நிறைவேற்றுவதில்லை. போத்தனுார் - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் முடிந்து, பல ஆண்டுகள் ஆகியும் இன்னும், கோவையிலிருந்து ராமேஸ்வரம், துாத்துக்குடி, கொல்லம், போடிநாயக்கனுார், ரயில்கள் இயக்கம் துவங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

K.n. Dhasarathan
ஜூலை 24, 2025 17:38

ரயில்வே அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா ? அவருக்கு தமிழகம் என்று ஒரு மாநிலம் இருப்பது தெரியுமா தெரியாதா ? இங்கு பல கட்ட ரயில்வே வேலைகள் அப்படியே கிடப்பில் இருப்பது தெரியுமா அல்லது பட்டியல் இடனுமா ? இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை, தொடர்ந்தால் இங்கு பொய்.ஜே.பி. என்று ஒரு கட்சி காணாமல் போகும்.


sangarapandi
ஜூலை 02, 2025 08:38

கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்குவதக்கு மட்டுமே கோரிக்கைகள் விடப்படுகிறது. அதற்கு பதிலாக தென் மாவட்டங்களிலிருந்து கோவை வழியாக பாலக்காடு -மும்பாய், மைசூர் , அஹமதாபாத் முதலான வடபகுதிக்கும் ரயில்கள் செல்லும் வகையில் புதிய வழித்தடங்களை கண்டறிந்து ரயில்களை இயக்க சேலம் ரயில்வேக்கோட்டம் முயர்சி செய்ய வேண்டுகிறேன் .


Sathiesh
ஜூன் 26, 2025 19:40

அப்போ நாம ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்பிகள் எல்லாம்? பார்லிமென்ட் கேண்டின்ல சமோசா, டீ சாப்பிட மட்டும்தானா?


venugopal s
ஜூன் 26, 2025 18:31

இதுபோன்ற அநீதிகளை ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கும், அவ்வளவு நியாயமானவர்கள்!


Sivagiri
ஜூன் 26, 2025 12:34

கேரள மக்களின் ரயில்வே தேவைகள் நிறைவேற்றப்படுவது சரியே என்றாலும், கோவையின் ரயில்வே தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். . . . இப்டி கோரிக்கை வைத்தால் - யார் மதிப்பார்கள் ? . . . கேரளாவுக்கு மட்டும் வேலை செய்து , தமிழ்நாட்டை புறக்கணிக்கும் , அதிகாரிகளே - தமிழ்நாட்டை விட்டு - வெளியேறுங்கள் - - என்று போராடினால் , கொஞ்சம் திரும்பி பார்ப்பார்கள் . . . கோரிக்கை கேட்கும் போதே , பிச்சை எடுப்பது போல , கூனி குறுகி , பல்லை காட்டி பரிதவித்து . . ? இப்படியா ? . . . . . தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா , அச்சம் என்பது மடமையடா . . . என்றெல்லாம் சினிமா பாடல்களையாவது மனதில் வைத்து , போராடலாம் . . .


Saleemabdulsathar
ஜூன் 26, 2025 09:27

உன்மை தான் இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தை சேர்ந்த கட்சிகள தான் ஏன் என்றால் ரயில்வே ஒன்றிய அரசு நிறுவனம் இதில் இருந்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு எந்த வைட்டமினும் கிடைக்காது அதனால் கட்சிகள் ரயில்வே துறையை பற்றி கவலை படுவதில்லை


RaNaMurty
ஜூன் 26, 2025 20:18

துலுக்கனுக்கு ஒன்றிய அரசு தான். எங்களுக்கு மத்திய அரசு. பயங்கரவாத பாகிஸ்தானுக்கு போங்க...


seenivasan
ஜூன் 26, 2025 08:41

தமிழகத்தில் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் அலுவலகங்களில் நீங்க கவனித்தால் மலையாளிகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளனர். அது மட்டுமல்லாமல் ரயில்வே உயரதிகாரிகள், IAS அதிகாரிகள் மட்டத்திலும் அவர்களே. ஆதலால் அனைத்து ரயில்களையும் அவர்கள் மிக எளிதாக பெற்று விடுகின்றனர். இதற்கு ஒரே வழி, தமிழர்கள் மத்திய அரசு பணிகளில் கவனம் செலுத்தி ரயில்வே மற்றும் அதிகாரி பணி இடங்களை நிரப்ப வேண்டும். ஏனென்றால் எந்த மத்திய அரசாக இருந்தாலும் அதிகாரிகள் சொல்லை தான் கேட்கும். நின்றி


SRIDHAAR.R
ஜூன் 26, 2025 07:28

தெற்கு ரயில்வே லவ் கேரளா ஒளிர்கிறது தமிழகம் மாறுகிறது நான் கண்ட காட்சி


Karthikeyan Palanisamy
ஜூன் 26, 2025 02:36

இதுக்குத் தான் பரமா படிச்சி மத்தியரசுப் பணிகளில் மத்தியரசு நிறவனங்களின் உயர் பதவிகளில் நமது மக்கள் பணி சேர வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை