உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் குண்டம் திருவிழா

அங்காள பரமேஸ்வரி கோவிலில் குண்டம் திருவிழா

அன்னுார்; அன்னுார், அங்காள பரமேஸ்வரி கோவில் குண்டம் திருவிழா வரும் 23ம் தேதி துவங்குகிறது. அன்னுார், தென்னம்பாளையம் சாலையில், பல நூறு ஆண்டுகள் பழமையான, அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி குண்டம் திருவிழா வரும் 23ம் தேதி துவங்குகிறது.அன்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கங்கணம் கட்டுதல் நடக்கிறது. மாலையில் கொடி ஏற்றப்படுகிறது. வரும் 24ம் தேதி காலை 8:00 மணிக்கு, அபிஷேக பூஜையும், மதியம் தீபாராதனையும், இரவு மயான பூஜையும் நடைபெறுகிறது.வரும் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு, நந்தி அழைத்தலும், அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. மாலையில் பக்தர்கள் கோவிலுக்கு அணி கூடை எடுத்து வருதலும், அம்மன் அழைத்தலும் நடக்கிறது.வரும் 26ம் தேதி காலை அலகு தரிசனமும், திருக்கல்யாண உற்சவமும், மதியம் பூக்கூடை எடுத்து வருதலும் நடக்கிறது. இரவு மூக்கனுார் சித்தி விநாயகர் கலைக்குழுவின் கும்மியாட்டம் நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 6:30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, ஜமாப் இசையுடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி அம்மன் குலதெய்வ பக்தர்கள் வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ