உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இன்று, லட்சார்ச்சனை நடக்கிறது.கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும், கோவில்பாளையம், கால காலேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா சிறப்பு யாக பூஜையுடன் துவங்கியது. மதியம் 1:19 மணிக்கு, குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசித்தார்.இதையடுத்து, தட்சிணாமூர்த்திக்கு, சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.விழாவில், அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், செயல் அலுவலர் தேவி பிரியா, அறங்காவலர்கள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று காலை 9:00 மணிக்கு, லட்சார்ச்சனை துவங்குகிறது. மதியம் 1:00 மணி வரையும், பின்னர், மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையும், லட்சார்ச்சனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை