உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீரடி சாய்பாபா கோவிலில் நாளை குரு பூர்ணிமா விழா

சீரடி சாய்பாபா கோவிலில் நாளை குரு பூர்ணிமா விழா

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள, சீரடி சாய்பாபா கோவிலில், நாளை (10ம் தேதி) குருபூர்ணிமா விழா நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்த குடையூர் மாதேஸ்வரன் மலை அருகே, சத்குரு சாய் சேவா சங்கத்தின் சார்பில் சீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது.இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. நாளை 10ம் தேதி கோவிலில் குரு பூர்ணிமா விழா நடைபெற உள்ளது. காலை, 5:30 மணிக்கு ஆரத்தியும், அதை தொடர்ந்து அபிஷேக பூஜையும், மாலையில் சத்குரு சாய் சேவா சங்கத்தின் பஜனையும், பல்லக்கு பவனியும் நடைபெற உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை சத்குரு சாய் சேவா சங்க அறங்காவலர்கள், குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை