உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனமழையால் மண் சரிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழையால் மண் சரிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறை; வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக, தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. கடந்த, 20 நாட்களாக கனமழை பெய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 150.10 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,812 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 456 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடபட்டுள்ளது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு: சோலையாறு - 70, பரம்பிக்குளம் - 51, ஆழியாறு - 5, வால்பாறை - 47, மேல்நீராறு - 86, கீழ்நீராறு - 75, காடம்பாறை - 15, மேல்ஆழியாறு - 4, சர்க்கார்பதி - 12, வேட்டைக்காரன்புதுார் - 22, மணக்கடவு - 24, துாணக்கடவு - 25, பெருவாரிப்பள்ளம் - 30, நவமலை - 3, பொள்ளாச்சி - 23 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை