உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியாத 12 ஆயிரம் பேருக்கு அபராதம்

பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியாத 12 ஆயிரம் பேருக்கு அபராதம்

கோவை; கோவையில் உள்ள பலரும் அறியாத ஒரு முக்கிய சமாச்சாரம், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது. கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து, ெஹல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், விபத்து உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை.போக்குவரத்து விதிமீறல்களும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. இதைக்கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.

உயிரிழப்பு அதிகம்

விதிமீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை விட, பின்னால் அமர்ந்து செல்பவர்களே அதிகளவில் உயிரிழப்பது தெரிந்தது.எனவே, பின்னால் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. துவக்கத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அரசு விதியை கட்டாயம் பின்பற்ற தேவையில்லை என, வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

விதிமுறை அமல்

இருப்பினும், தொடர் உயிரிழப்பின் காரணமாக, விதிமுறையை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட்டப்பட்டது. 2020ம் ஆண்டு முதல், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது.அதன் பின் ஓரிரு மாதங்கள், பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஹெல்மெட் அணிந்தவாறு சென்றதை சாலைகளில் காண முடிந்தது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு ஒரு வாரம் மட்டும் ஏற்படுத்தப்பட்டது.

அரைகுறை விழிப்புணர்வு

இந்த விழிப்புணர்வு பிரசாரம் போதாது என்பதை, தற்போது பெரும்பாலானோர் ெஹல்மெட் அணியாமலே பயணிப்பதில் இருந்து தெரியவருகிறது. ஆனால், வாகன உரிமையாளர் கட்டாயம் அபராதம் செலுத்திதான் ஆக வேண்டும்.அபராதம் விதிக்கப்பட்ட பலரும், அவற்றை செலுத்தி வருகின்றனர். இது குறித்து பலரும் அறியாததால், போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''வாகன ஓட்டி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. அதைத்தடுக்கவே தற்போது இவ்விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.பில்லியன் ரைடரும்(பின்னால் அமர்பவர்) ெஹல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை, பல ஆண்டுகளாக உள்ளது. பல கட்டங்களாக இது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலரும் அதுகுறித்து கவலைப்படுவதில்லை. ''கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்டறிந்து, அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

அபராதம் விதிக்கப்பட்டவர்கள்

அபராதம் விதிக்கப்பட்டவர்கள் - 35,337பின்னால் அமர்ந்தவர்கள் - 12,188மொத்தம் - 47,525


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vijayasekar B
மார் 30, 2025 09:00

மது கடையை மூடினால் விபத்துகள் குறையும்... இதை யாரும் சொல்வதில்லையே... மது கடைக்கு அருகில் போலீசார் நின்றால் அனைத்து குடி மக்களையும் ட்ரின்க் & டிரைவ் கேசில் பிடிக்கலாம்...


Ethiraj
மார் 30, 2025 06:24

Collecting fines from two wheeler for not wearing helmet is reasonable. What about encroachment in platform and roads,indiscriminate parking in roads,street light not working ,signal light not working ,huge amount of garbage collection in roads,pot holes in roads ,flooding of roads ,overflowing sewerage, Drinking ng water not supplied ,electricity not supplied who is responsible why we are not collecting fines from them. 33 % of general budget paid to them as salary and perks They are harming 8 crore population of TN punish them ,jail them remove them from service. Will court ,govt and political parties act


Rajan A
மார் 29, 2025 17:47

ஹெல்மெட் என்ற பெயரில் பிளாஸ்டிக் கூடையை போட்டு அலைகிறார்கள். பிஐஸ் முத்திரை பதித்த ஹெல்மெட் கட்டாயம் ஆக்க வேண்டும். அதே சமயம் மட்டமான ரோடு போடும் அரசுகளை எப்படி தண்டிப்பது? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டும்


sridharan
மார் 29, 2025 10:58

அப்போ ரோடு ஒழுங்க போடாதவங்களுக்கும், புதுசா போட்ட ரோட்டுல இஷ்டத்துக்கு குழிநோண்டரவங்களுக்கும், கொடி நட்ட, கட்சி பந்தல் போட குழி நோண்டரவங்களுக்கும் என்ன பைன்னு சொல்லுங்க ஆபீஸர்.


Sivagiri
மார் 29, 2025 08:27

குடிகார லாரி/லோட் ஆட்டோ /ஆட்டோ/கார்- டிரைவர்களை கண்காணிக்க - தடுக்க - அதோடு விதி மீறி அதி வேகம் - ராங் சைட் - ஓவர் லோட் - ஓட்டுபவர்களை கண்டுபிடிக்க அபராதம் போட - எந்த கண்காணிப்பு கேமராவும் இல்லை -


அப்பாவி
மார் 29, 2025 08:05

படத்துல ஒருவண்டில அஞ்சு பேர் போறாங்களே. அஞ்சு ஹெமட் வாங்கணுமா? ஒரு கைக்குழந்தை போகுதே, அடுக்கு ஹெல்மெட் வாணாமா?


தமிழன்
மார் 29, 2025 01:03

வசூல் செய்வதில் மட்டும் கராராக இருக்கும் அரசுகள் இந்திய போக்குவரத்து சட்டப்படி ஷோரூம்களில் புது பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் என்பது விதி சுப்ரீம்கோர்ட்டும் இதை உறுதிபடுத்தியுள்ளது ஆனால் எவனும் ஷோரூம்களில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஹெல்மெட் கொடுப்பதில்லை 1 ஹெல்மெட் மட்டுமே கொடுக்கிறானுகள் முதலில் இதை ஒழுங்குபடுத்திவிட்டு பிறகு வசூல் செய்தால் பரவாயில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை