உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளக்கை அணைக்காததால் வீட்டில் தீ

விளக்கை அணைக்காததால் வீட்டில் தீ

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை நகராட்சி 17 வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகரை சேர்ந்தவர் காமராஜ், 38. இவரது மனைவி புனிதா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று காமராஜ், புனிதா ஆகியோர் பணிகளுக்கு சென்றுவிட, குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென வீட்டில் உள்ள படுக்கை அறையில் தீப்பிடித்தது. மேட்டுப்பாளையம் தீயணைப்பு அலுவலர் அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பொருட்கள் எரிந்து சேதமானது. விளக்கு ஏற்றிவிட்டு அதை அணைக்காமல் சென்றதே, தீ விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை