பிரதிபலிப்பான் அமைக்கணும்
மடத்துக்குளம், ;மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் உள்ளது. இங்கு அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பழநி, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன.இதனால், எந்நேரமும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இப்பாலத்தில், இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் பொதுப்பணித்துறையினரும், பேரூராட்சியினரும் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.