உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேங்காய் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு

தேங்காய் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு

சூலுார்; சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடக்கும், வாராந்திர ஏலத்தில் பங்கேற்க, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது: சூலுார் திருச்சி ரோட்டில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு உள்ளிட்ட விளை பொருட்கள் ஏலம் நடக்கிறது. குறிப்பாக, தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புக்கு நல்ல விலை கிடைக்கிறது. எந்த இடைத்தரகு கமிஷனும் தரத் தேவையில்லை. கடந்த வாரம், தேங்காய் கிலோ ஒன்றுக்கு, அதிகபட்சமாக, 62 ரூபாய்க்கும், தேங்காய் பருப்பு அதிக பட்சமாக, கிலோ ஒன்றுக்கு, 185 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 160 ரூபாய்க்கும் ஏலம் போனது. விற்பனை செய்ய முடியாவிட்டால், விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம். இருப்பு வைக்கும் பொருட்களுக்கு குறைந்த வட்டியில் பொருளீட்டு கடனும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ