மாநில அளவிலான கபடி போட்டியில் கற்பகம் பல்கலை இரண்டாம் இடம்
கோவை; மாநில அளவிலான கபடி போட்டியில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடம் பிடித்தது.திருநெல்வேலி மாவட்டம், சிங்கம்பாறையில் மாநில அளவிலான கபடி போட்டி இரு நாட்கள் நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த முதல் காலிறுதிப் போட்டியில், கற்பகம் பல்கலை அணி, ராமநாதபுரம் மாவட்டம் சவுத் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.இதில், 34-17 என்ற புள்ளி கணக்கில், கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது. அரையிறுதி போட்டியில் கற்பகம் பல்கலை அணி, துாத்துக்குடி துரைசிங்கம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எதிர்கொண்டது. இதில், 34-20 என்ற புள்ளி கணக்கில், பல்கலை அணி வெற்றி பெற்றது.இறுதிப்போட்டியில், கற்பகம் பல்கலை அணியும், தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலை அணியும் மோதின. 24-31 என்ற புள்ளி கணக்கில், தஞ்சாவூர் அணி வெற்றி பெற்றது. முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசு வென்ற , கற்பகம் பல்கலை அணியினரை கற்பகம் கல்வி குழுமங்களின் தாளாளர் வசந்தகுமார், உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.