மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிஷேகம்
18-Nov-2024
மிளகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
09-Nov-2024
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள பெரிய வடவள்ளியில் உள்ள புஜ்ஜிங்கம்மன் கோவிலில், பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த 3ம் தேதி முதல் கால பூஜை, மண்டல பூஜை, மகா தீபாரதனை நடந்தது. 4ம் தேதி காலை இரண்டாம் கால யாகம், விமான கோபுர கலசம் பிரதிஷ்டை, தேவதா பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாட்டுதல் போன்றவைகள் நடந்தன. மாலை மூன்றாம் கால யாகம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று முன் தினம் அதிகாலை நான்காம் கால யாகம், சர்வ காயத்ரி ஹோமம், நாடி சந்தானம், யாத்ரா தானம் நடந்தது.பின்னர் வேத மந்தரங்கள் முழங்க, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ சிவகார்த்திகேயன் ஆச்சாரியார்,சிவ ஸ்ரீ சுகவனேஸ்வான் சிவம் ஆகியோர் தலைமையில் விமான கலகசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபகனை காட்டப்பட்டது. பஜனை, கும்மியாட்டம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.---
18-Nov-2024
09-Nov-2024