உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள திருமலைராய பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி காலை, 6:00 மணிக்கு யாகசாலை வேள்வி நடந்தது. நிகழ்ச்சிக்கு கவுண்டம்பாளையம் ஸ்ரீ வாராகி மந்திராலயம் பீடாதிபதி வாராகி மணிகண்ட சுவாமிகள் தலைமை வகித்தார். இரவு, 7:30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருமலைராய பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவு, 8:00 மணிக்கு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை