உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராகி பீடம் சண்மதாலயம் மடத்தில் ஜெய வீர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 27ம் தேதி நடக்கிறது. பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சாமி தோட்டம், நவசக்தி மகா வாராஹி அம்மன் கோவில் வளாகத்தில், 11 அடி உயரத்தில் ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா, இம்மாதம், 27ம் தேதி காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி, 25ம் தேதி மாலை கும்ப கலச தீர்த்தம், கோபுர கலசம், முளைப்பாரி ஆகியன மாரியம்மன் கோவிலில் இருந்து எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு வாஸ்து, கோபுர கலச ஸ்தாபனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 26ம் தேதி காலை, 7:00 மணிக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்விகள் மாலை, 7.00 மணிக்கு அஷ்டபந்தனம் நடக்கிறது. 27ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி, ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நாடி சந்தானம், கலச யாத்திரை நடக்கிறது. காலை, 9:30 மணியிலிருந்து 10:00 மணிக்குள் கோபுரச கலச தீர்த்த அபிஷேகம் நடக்கிறது. 10.00 மணிக்கு மேல் அபிஷேக அலங்காரம், தச தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை