உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

ஆதீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

நெகமம்; கிணத்துக்கடவு அருகே, பெரியகளந்தை பெரியநாயகி உடனமர் ஆதீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வரதராஜப்பெருமாள் கோவிலில் கடந்த ஏப்., மாதம், 30ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, 40 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. இதில், நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.நேற்று மண்டல பூஜை நிறைவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 108 கலச அபிேஷகம், அலங்கார பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ