குதிரை வாகனத்தில் மன்னீஸ்வரர் திருவீதி உலா
அன்னுார்,; அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் கடந்த 10ம் தேதி தேரோட்டம் நடந்தது.11ம் தேதி இரவு கோவிலில் துவங்கி, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, கடைவீதி, ஓதிமலை ரோடு வழியாக அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார்.பவளக்கொடி கும்மி ஆட்டம் ஆசிரியர் விசுவநாதன் தலைமையில் நடந்தது. சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்கள் என 160 பேர் இரண்டரை மணி நேரம் கும்மி பாடலுக்கேற்ப நடனமாடினர். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர், கட்டளைதாரர்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று இரவு 7:00 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும், 7:30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 14ம் தேதி அதிகாலையில் மகா அபிஷேகம் நடக்கிறது.