உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா அ.தி.மு.க., கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா அ.தி.மு.க., கொண்டாட்டம்

- நிருபர் குழு -பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், எம்.ஜி.ஆர்., 108-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., அலுவலகம், நகர அ.தி.மு.க., சார்பில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., திருவுருவ படத்துக்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.* கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே அ.தி.மு.க.,வினர் சார்பில், எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், அ.தி.மு.க., செயலாளர் மூர்த்தி, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.* வால்பாறை நகர அ.தி.மு.க.,சார்பில் நடந்த விழாவில், ரொட்டிக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர்.,சிலைக்கு, நகர துணை செயலாளர் பொன்கணேஷ் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். விழாவில், நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* உடுமலை உழவர் சந்தை அருகேயுள்ள தொழிற்சங்க அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.* மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ