மேலும் செய்திகள்
பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
24-Sep-2025
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே அரிவாளை காட்டி, மிரட்டி பணம் பறித்த இரு நபர்களில் ஒருவரை கைது செய்தனர். நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை டாஸ்மாக் பாரில் பணியாற்றி வருபவர் அருண்குமார், 23. இவர் பணியில் இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 38, முகேஷ், 22. ஆகியோர் அரிவாளை காட்டி மிரட்டி அருண்குமாரிடமிருந்த, 2000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி பணத்தை திருடி சென்ற பிரகாஷை கைது செய்தனர். முகேஷை தேடி வரு கின்றனர்.
24-Sep-2025