உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தீபாவளி பண்டிகைக்கு, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தமிழகத்தில், தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடும் நிலையில், பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அதிகம். இதனால், பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். நெரிசலை சமாளிக்க, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வரும், 31ல், தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், நேற்று முதல் சிறப்பு பஸ்களின் இயக்கம் துவங்கியது. இந்த பஸ்கள், வரும், நவ., 3ம் தேதி வரை, இயக்கப்பட உள்ளது.பொள்ளாச்சியில் இருந்து, கோவை வழித்தடம் வாயிலாக, திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கும், பழநி மார்க்கமாக மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள், என, மொத்தம், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று துவங்கியது. தீபாவளி முடிந்து, வெள்ளிக்கிழமை அமாவாசை என்பதால், தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படும். டிரைவர்கள், அவரவர் விருப்பத்தின் பேரில், தொலைதுார ஊர்களுக்கு பஸ்சை இயக்க அனுமதிக்கப்படும்.இதேபோல, சொந்த ஊர் திரும்பிய மக்கள், தீபாவளி முடிந்து, மீண்டும் திரும்புவர் என்பதால் பழநி மார்க்கமாக, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக, பயணியர் கூட்டத்துக்கு ஏற்ப, தேவையான வழித்தடங்களில் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ