கொரோனா சிகிச்சைக்கு மருத்துவகாப்பீடு தொகை வழங்க உத்தரவு
கோவை; கொரோனா சிகிச்சைக்கு, மருத்துவ காப்பீடு தொகை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. கோவை, இடையர் பாளையத்தை சேர்ந்த கார்த்தி என்பவர், 'மேக்ஸ் பூபா ெஹல்த் இன்சூரன்ஸ்' நிறுவனத்தில், மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் கடந்த 2021, மே,ல், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதற்கான மருத்துவ சிகிச்சை கட்டணம், 53,507 ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால், 40,837 ரூபாய்க்கு அனுமதி அளித்தனர். உடனடியாக பணம் அனுப்பி வைக்கப்படவில்லை. விரைவில் தொகை தருவதாக உறுதி அளித்து பல மாதங்களாகியும் பணம் கிடைக்கவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட கார்த்தி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''இன்சூரன்ஸ் நிறுவனம், மருத்துவ காப்பீடு தொகை, 40,837 ரூபாய், ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.