ஓவிய கண்காட்சி துவக்கம்
கோவை : கோவை பீளமேட்டில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில், 'ரிதமிக் பேலட்' என்ற தொடர் ஓவியக் கண்காட்சி, வரும் 26ம் தேதி துவங்குகிறது.இதில் சென்னையைச் சேர்ந்த ஓவியர்கள், ராஜு துர்செட்டிவார் மற்றும் மனிஷா ஆகியோர் வரைந்த 50 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. கண்காட்சியை, பொதுமக்கள் காலை 10:00 முதல் மாலை 6:30 மணிவரை பார்வையிடலாம்.