வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பொது மக்களின் வயிற்றெரிச்சல் அத்தனை பதிவிடப்பட்ட கருத்துக்களிலும் வெளிப்படுகிறது. மத்திய அரசின் சிபிக்ராம்ஸ் தீர்வுகள் வழங்குகிறது. அதே சாயலில் இருக்கும் முதல்வரின் முகவரி வெறும் கண்துடைப்பு தான். மனு போட்டால் சும்மா அங்கே போ இங்கே போ அவரைப் பார் இவரைப் பார் என்று சுத்தி விட்டுகிட்டே இருப்பாங்க. அத்தனை பட்டும் நமக்கெல்லாம் இன்னும் அறிவு வரவே இல்லையே.... சும்மா இங்க புலம்பிட்டு போக வேண்டியதுதான்
மக்களின் அவரவர்களின் சொத்தை சரிபார்த்து அதற்கான சான்று தர எதற்காக இத்தனை சங்கடங்கள் மக்களுக்கு... இதை எந்த அரசும் கண்டு கொள்வதாக தெரியவில்லை...
25000 பெயர் மாற்றம் செய்வதற்க்கு
திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் தொழில் துவங்க நடையாக நடந்தாலும் முடியாது
ஓரே தீர்வு மனு மற்றம் அதன் நகல்களை பாதுகாத்து திட்டமிட்டே முற்கேடாக நிராகரிக்கபடும் மனுதாரர்கள் தகவல் உரிமைக்கு விண்ணப்பிக்கவும் பின் துகர்வோர் நீதிமன்றம் அதற்க்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில ஆளுநருக்கு புகார் அளிக்கவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வமழிக்காட்டுதல் நலம் இல்லையேல் லஞ்சம் எனக்கருதினால் லஞ்ச ஓழிப்புத்துறை முயற்சிக்கலாம்.
2014 ல் வாங்கிய வீட்டடி மனைக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு தலைமியிடத்து துணை வட்டாட்சியர் அவர்களால் கையொப்பமிட்டப்பட்டு பட்டா வழங்கப்பட்டு உள்ளது ஆனால் கணனியில் ஏற்றாமல் விட்டுவிட்டார்கள் ஆனால் 2020 ல் தான் எனக்கு தெரியவந்தது ஆகையால் நான் வட்டாட்சியரிடம் மூன்று மனு கொடுத்து நடையாக நடந்தும் ஒன்றும் நடக்கவில்லை.மேலும் 2022 மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து ஒன்றும் நடக்கவில்லை அதனை RTI மூலமாக விண்ணப்பித்து அப்பீல் வரை சென்று ஒன்றும் நடக்காமல் தகவல் ஆணையாளர் வரை சென்று விசாரணையின் போது தகவல் ஆணையாளரால் வட்டாட்சியரை கண்டித்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை மேலும் நமது முதல்வன் போன்றவைகள் மூலமாகவும் முயற்சி செய்து பலன் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்
இதுவே டாஸ்மாக் வேணுமுன்னு கேட்டுப் பாருங்க. அன்றே நடக்கும். நீங்கள் நடக்கவே தேவையில்லை.