பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில், நந்திக்கும், சிவ பெருமானுக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதுபோன்று, யோக நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சக்தி உடனுறை மலையாண்டீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதில், சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் அருள்பாலித்தார். வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, மார்கழி மாத பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதன்பின் ரிஷப வாகனத்தில் சிவபெருமான், தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.வால்பாறை சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி கோவிலில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்த பிரதோஷ பூஜையில், சிவபெருமானுக்கு, 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷக வழிபாடு நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் அருள்பாலித்தார்.