மேலும் செய்திகள்
நாளை பி.எப்., குறைகேட்பு
27-Jul-2025
கோவை: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில், சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 28ல் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கோவை காருண்யா நகரில் உள்ள, ஏஞ்சல் சமுதாய கூடத்திலும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேணுவில் உள்ள ஆல்பா ஜி.கே.மெட்ரிக் பள்ளியிலும் நடக்கிறது. வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை, நேரில் முறையிடலாம். யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி.எண் கொண்டு வருவது அவசியம். பி.எப்.தொடர்பான குறை களை, pghs.epfindia.gov.inஎன்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம், என, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் (2) அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
27-Jul-2025