பள்ளி மாணவர் காயம்; போலீசார் விசாரணை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கொங்கநாட்டன்புதுாரை சேர்ந்தவர் சரவணன்,16. இவர், புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். பள்ளி வளாகத்தில், அவரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வடக்கிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். மக்கள் கூறுகையில், 'புரவிபாளையம் அரசு பள்ளியில், புதரில் விஷ பூச்சிகளின் உள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள புதரை அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும்,' என்றனர்.