உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலைப் பொருட்கள் பதுக்கிய ஏழு பேர் கைது

புகையிலைப் பொருட்கள் பதுக்கிய ஏழு பேர் கைது

கோவை: உக்கடம் போலீசார், புகையிலை விற்பனை குறித்து ராஜ வீதியில் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், புகையிலைப் பொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தினர். அதில், கோவை உக்கடத்தை சேர்ந்த சசிகுமார், 45 என்பவர் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 1,384 பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், போத்தனுார், பீளமேடு, சரவணம்பட்டி போலீசார் நடத்திய சோதனையில், ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !