உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு

உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு

போத்தனுார்: கோவை சுந்தராபுரம் காந்தி நகர், 6வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் ரெக்ஸ். இவரது மனைவி ரஜினி தெரஸ் பாத்திமா, 47. தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர். நேற்று இரவு, 8:30 மணியளவில், கடைக்கு சென்று பால் வாங்கினார்.வீட்டிற்கு திரும்பி வரும்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், கழுத்திலிருந்த ஏழு சவரன் தங்க தாலியை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ