உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சை வழிமறித்த யானை அதிரப்பள்ளியில் அதிர்ச்சி

பஸ்சை வழிமறித்த யானை அதிரப்பள்ளியில் அதிர்ச்சி

வால்பாறை:வால்பாறை - அதிரப்பள்ளி வழித்தடத்தில், அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகளால், பயணியர் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, சாலக்குடிக்கு கேரள அரசு பஸ் இயக்கப்பட்டது. வெற்றிலைப்பாறை அருகே பஸ் சென்றபோது, கூட்டமாக வந்த யானைகள் பஸ்சை வழிமறித்தன. சுதாகரித்த டிரைவர், பஸ்சை நிறுத்தினார். சிறிது நேரம் யானைகள் அங்கும், இங்கும் ஆவேசமாக நடந்தன. கூட்டத்தில் இருந்த ஒரு யானை, பஸ்சின் கண்ணாடி அருகே ஆக்ரோஷமாக வந்து, முன்பகுதியில் உள்ள பம்பரை சேதப்படுத்தியது. டிரைவர் பஸ்சை, 'ஸ்டார்ட்' செய்ததும் யானைகள் ஒதுங்கி வழிவிட்டன. டிரைவரின் சமயோசித நடவடிக்கையால், பஸ்சில் இருந்த 11 பயணியர் பாதிப்பின்றி தப்பினர். தகவலறிந்ததும், அதிரப்பள்ளி ரோட்டில் வெற்றிலைபாறை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. யானைகள் வனத்திற்குள் திரும்பியதை உறுதி செய்த பின், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி