உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலி முகவரியில்  சிம் கார்டு; மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்

போலி முகவரியில்  சிம் கார்டு; மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்

கோவை; போலி முகவரி கொடுத்து, சிம்கார்டு வாங்கிய வழக்கில், கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக, மாவோயிஸ்ட்களான, கேரளாவை சேர்ந்த ரூபேஷ்,54, மனைவி ஷைனி,52, அனுாப்,37, மற்றும் கண்ணன்,56, வீரமணி,69 ஆகியோர், 2015 மே மாதம் கோவை 'கியூ' பிரிவு போலீசாரால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஷைனி, கண்ணன், வீரமணி, அனுாப் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கின் சாட்சி விசாரணை, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், நடந்து வருகிறது. கோவை காந்திபுரம், வெரைட்டி ஹால் ரோடு மற்றும் பொள்ளாச்சியில், போலி முகவரி கொடுத்து, மொபைல் போன் சிம்கார்டு வாங்கியதாக, ரூபேஷ் மீது மேலும் மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், சாட்சி விசாரணை நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்தபோது, கேரள சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ரூபேஷ் அழைத்து வரப்பட்டார். விசாரணையை, அக்., 6க்கு ஒத்திவைத்து, நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை