உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

சூலுார்; அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில், ஆனி பூச்சாட்டு திருவிழா பக்தி பரவசத்துடன் நடந்தது. சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது. இக்கோவில், ஆனி பூச்சாட்டு திருவிழா, கடந்த 6 ம்தேதி முனி விரட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 7 ம்தேதி இரவு, அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று முன்தினம் கரகாட்டத்துடன் அம்மை அழைத்தல் மற்றும் கல்யாண உற்சவம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.நேற்று, முளைபாரி, மாவிளக்கு மற்றும் பூச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபாடு செய்து, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவை ஒட்டி, அம்மன் திருவீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ