உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மிராரி போட்டியில் மாணவர்கள் அசத்தல்

 மிராரி போட்டியில் மாணவர்கள் அசத்தல்

கோவை: டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய அளவிலான, 'மிராரி 2026' போட்டி நடந்தது. எஸ்.என்.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் இப்போட்டியில் மாணவர்கள் கலை, தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை வெளிப்படுத்தினர். 85க்கும் மேற் பட்ட கல்லுாரிகளிலிருந்து 1,800 மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் அதிக புள்ளிகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பதக்கத்தை, கள்ளக்குறிச்சி செயின்ட் சார்லஸ் கலை அறிவியல் கல்லுாரி வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரியின் செயலர் நளின் விமல் குமார் பரிசுகளையும், சான்றிதழையும் வழங்கினார்.முதல்வர் அனிதா, கல்வியாளர் ஞானசேகரன், துணை முதல்வர் நரேஷ்குமார், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை