துளிர் திறனறி தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி
பொள்ளாச்சி; தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த, நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துளிர் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற, பொள்ளாச்சி, ரமணமுதலிபுதுார் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி வட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பூபதி சபரீஸ், பேசுகையில், ''அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு இருக்கும் புரிதலை வெளிக்கொணரும் விதத்தில் இந்த தேர்வு நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.பள்ளி தலைமையாசிரியர் அழகேஸ்வரி, வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.