உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில்  இன்று சூரசம்ஹார விழா 

கோவில்களில்  இன்று சூரசம்ஹார விழா 

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.விழாவையொட்டி தினமும், நான்கு கால அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.நேற்று மாலை, 6:00 மணிக்கு வேல்வாங்கும் உற்சவம் நடந்தது. இன்று மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹாரமும்;நாளை காலை, மஹா அபிேஷகம், மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 9ம் தேதி மாலை, திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.*குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, மாரியம்மனிடம் இருந்து முருகப்பெருமான்சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு ஊர் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மஹா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, திருக்கல்யாணமும், மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.*அங்கலகுறிச்சி செல்வமுருக பெருமான் கோவிலில் நேற்று காலை, மாரியம்மன் கோவிலில் அம்பிகையிடம் இருந்து வேல்வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முருகனிடம் வேல் சேர்க்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இன்று மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு பால் அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, வள்ளி, தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு மஹா அபிேஷகமும், திருக்கல்யாண உற்வசமும் நடக்கிறது.

வால்பாறை

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 12ம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்துசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. உற்சவர்சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இன்று, மதியம், 12:00 மணிக்கு எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலிலிருந்து, சூரனை வதம் செய்ய அன்னையிடம் முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.நாளை காலை, சுப்ர மணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம், பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது.

உடுமலை

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. நேற்று, யாக சாலை பூஜைகள், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. இன்று, காலை, யாக சாலை வேள்வி பூஜை, அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 3:15 மணிக்கு, வேல் வாங்கும் உற்சவம், சுவாமி புறப்பாடும், சூரசம்ஹாரமும் நடக்கிறது.நாளை, காலை, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.*பாப்பான்குளம், ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று, காலை, மாலாமந்திர ஹோமம், காயத்திரி மந்திர ஹோமம், சுவாமிக்கு உச்சி கால திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. மாலையில், ராஜஅலங்காரம், துாப, தீப நைவேத்தியம், இரவு, அம்மை, அப்பன் பூஜை செய்து சக்திவேல் வாங்கும் உற்சவம், ஜெகதீஸ்வரருக்கும், சிங்காரவேலருக்கும் சமகால தீபாராதனையும் நடந்தது.இன்று, காலை, 5:45 மணிக்கு, விளாபூஜை, வெள்ளிக்கவச அலங்காரம், அகத்திக்கீரையுடன் குளித்தளிகை படையல் நிவேதனம், மாலை, 4:00 மணிக்கு, நடை திருக்காப்பிடுதல், வீரவேல் முருகன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை