உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தியின்றி அறுவை சிகிச்சை; குடும்பநலத்துறை அழைப்பு  

கத்தியின்றி அறுவை சிகிச்சை; குடும்பநலத்துறை அழைப்பு  

கோவை; நாளை காந்திபுரம் லட்சுமி காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள, சி.டி.எம்., மாநகராட்சி நகர்நல மையத்தில்,- ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத, குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடக்கிறது. இச்சிகிச்சை, 5 நிமிடத்தில் பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு இலவசமாக செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எவ்வித பக்கவிளைவுகளுமின்றி செய்யப்படும் இச்சிகிச்சையினை, ஏற்கும்ஆண்களுக்கு வெகுமதி வழங்கப்படுகிறது.இச்சிகிச்சையால் இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்பிற்கோ பிரச்னை இருக்காது. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையினை விட பன்மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய அவசியமில்லை. சந்தேகங்களுக்கு, 80728 65541 என்ற எண்ணில், மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் கவுரியை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ