உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 25ம் தேதி தொழில்நுட்ப பயிற்சி

வரும் 25ம் தேதி தொழில்நுட்ப பயிற்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில், வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் பிரிவில், ‘வேளாண் காடுகளுக்கான நவீன நாற்றங்கால் தொழில்நுட்பம்’ பயிற்சி, வரும் 25ம் தேதி நடக்கிறது. வணிக நோக்கிலான நாற்றங்கால் அமைத்தல், மேலாண்மை முறைகள், நவீன நாற்றங்கால் கருவிகள் மற்றும் உபகரணங்கள்,  சிறந்த தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்கான நடைமுறை,  குளோனல் இனப்பெருக்க நுட்பங்கள், விதை கையாளும் நுட்பங்கள், வணிக ரீதியாக துவங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விபரங்களுக்கு: 74184 70345, 94877 12210. ------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி