உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்து நடக்கும் பிளாக் ஸ்பாட் எண்ணிக்கை 72 ஆக உயர்வு! ஐந்தே ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்தது

விபத்து நடக்கும் பிளாக் ஸ்பாட் எண்ணிக்கை 72 ஆக உயர்வு! ஐந்தே ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்தது

கோவை; விபத்துகள் நடக்கும் பிளாக் ஸ்பாட்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. அதை குறைக்க போலீஸ் தரப்பில், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் முக்கிய இடங்களில், வாகன தணிக்கை செய்கின்றனர். இருப்பினும் விபத்துகள் குறைந்தபாடில்லை. 2020ம் ஆண்டு விபத்து நடக்கும் இடங்கள் குறித்து போக்குவரத்து போலீஸ் ஆய்வு செய்தனர். அப்போது, 15 இடங்கள் (பிளாக் ஸ்பாட்) அடையாளம் காணப்பட்டன. ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை, 72 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது: நகரில் 500மீ. தூரத்துக்குள் அடிக்கடி விபத்து நடப்பது, ஒரே இடத்தில் அதிக விபத்து நடப்பது ஆகியவற்றின் அடிப்படை யில், 'பிளாக் ஸ்பாட்' தீர்மானிக்கிறோம். இப்போது கண்டறிந்த 72 பிளாக் ஸ்பாட்களில் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பலகையும், தரையில் விபத்து எச்சரிக்கை பதிவும் இருக்கும். பிளாக் ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பது, விதிமீறலுக்கு உடனே வழக்கு பதிந்து அபராதம் விதித்தல், 'நோ ஹெல்மெட், நோ என்ட்ரி' திட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, விபத்துகள் குறைந்துள்ளன. கடந்த ஏழு மாதங்களில் நடந்த விபத்து விவரம்:

விதிமீறல்

அபராதம் 6 கோடி

மாநகரில் கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, 683 விபத்துகள் நடந்தன; 175 பேர் உயிர் இழந்த னர். 539 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டில் இதுவரை 601 விபத்துகள் நடந்துள்ளன. 176 பேர் பலியாகி உள்ளனர். 644 பேர் காயம் அடைந்தனர். விதிமீறியதாக 2.51 லட்சம் வழக்குகள் பதிவாகி ன. ரூ.6 கோடி அபராத ம் விதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான கார ணங்களில் பராமரிக்கப்படாத சாலைகள் என்பது இடம்பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sri
ஆக 20, 2025 14:36

முதலில் சாலை அமைக்கும் பொழுது வண்டிகள் நிறுத்த பார்க்கிங் இடம் விட்டே சாலை அமைக்க வேண்டும். கோவையில் ஒரு சில முக்கியமான சாலைகளை தவிர பெரும்பாலான சாலைகளில் பார்க்கிங் வசதியே இல்லை. நோ பார்க்கிங், ஒன் வே ட்ரிவிங்கில் எதிரே வருவது போன்ற பிரச்னையை சரி செய்தால் விபத்து குறையும்


sasidharan
ஆக 20, 2025 13:38

என்னதான் கண்காணிப்பு தீவிரப்படுத்தினாலும் எல்லா சாலைகளிலும் வாகனங்கள் அதி வேகமாகத்தான் செல்கின்றன. யாருமே சாலை விதிகளை மதிப்பதில்லை. ஹெல்மெட் போடாமலும் , செல்போன் பேசிக்கொண்டும், ஒரே வாகனத்தில் மூன்று நான்கு பேர் செல்வது என்பது தினமும் காணும் காட்சிகள். இனியும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே விபத்துகள் குறையும் .


சமீபத்திய செய்தி