வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதே நிலை தான் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் நடக்கிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் சென்னையில் தனியார் பேருந்துகள் அனுமதி இல்லை வெறும் அரசு பேருந்துகள் மட்டும் தான். ஆனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் இங்கே குறைந்த பேருந்துகளை தான் இயக்குகிறார்கள். தேவை இல்லாத நேரங்களில் அதிகமான பேருந்துகள் இயங்குகிறது. மற்ற மாவட்டங்களிலாவது பரவாயில்லை அரசு பேருந்து தாமதமாக வந்தால் தனியார் பேருந்தை பிடித்து நாம் போக வேண்டிய இடத்திற்கு சென்றடையலாம் ஆனால் சென்னையில் அது கூட இல்லை என்ன செய்வது எல்லாம் விதி இந்த தொல்லையிலிருந்து தப்பிக்க தான் பலர் சொந்த வாகனம் வாங்கி ஓட்டுகிறார்கள் பெட்ரோல் செலவு இருந்தாலும் கூட வேறு வழி இல்லாததால்.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகம் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க முடியும். அதன் மூலம் இந்த பயண நெருக்கடியை வெகுவாக சரி செய்யலாம் .
நிச்சயமாக தவறான அதிகாரிகளே காரணம் காலை மாலை peakhoursl ல் அரசு பஸ்கள் 30 செகண்டுக்குள்ள 4 பஸ்கள் சென்றுவிடும் பின் 20 நிமிடம் பஸ் ஏ இருக்காது அப்போது தனியார் பஸ் வந்தால் பள்ளி கல்லூரி வேலைக்கு செல்பவராகள் வேறு வழி இன்றி தொங்கியபடி பயணம் செய்கின்றனர் .பள்ளி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர் .அசம்பாவிதம் நடந்த பின் கத்தி பயன் இல்லை இதற்கு பொறுப்பானவர் தண்டிக்க பட வேண்டிய குற்றவாளி ஆவார்
நிச்சயமாக லஞ்சம் கை மாறுகிறது தனியார் பஸ் முதலாளிகளிடமிருந்து. தனியார் பஸ்கள் பருத்தி முட்டையை அடைப்பது போல் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். ஆனால் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களே அதிகம். காவல் துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்