தாய் -- சேய் சிலை திறப்பு பார்வையாளர்கள் வியப்பு
கோவை,; தாய்மையை போற்றும் விதமாக, தாய், சேய் சிலை, கோவை தடாகம் சாலை, லாலி ரோடு சந்திப்பு ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ளது.கோவையில் செயல்படுத்தப்படும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆறரை அடி உயரம் கொண்ட இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உயர்ரக பைபர் ஆப்டிக்கல், உள்ளே அலுமினியம் மற்றும் இரும்பு பொருட்களால், இயற்கை சூழலை தாங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை நடந்த திறப்பு விழாவில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.