மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
அன்னுார்; திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், நாளை (18ம் தேதி) தேய்பிறை அஷ்டமி விழா நடக்கிறது.அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று, பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.இங்கு பைரவருக்கு என தனியாக கோவில் உள்ளதால், பல ஊர்களில் இருந்தும் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். நாளை (18ம் தேதி) இரவு 7:00 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. பைரவருக்கு, பல்வேறு திரவியங்களால், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது. தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்று, இறையருள் பெற, விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.