உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விலையில் மாற்றமில்லை 

இளநீர் விலையில் மாற்றமில்லை 

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் கிடையாது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இன்றி, 41 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 16,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து பண்டிகை காலங்கள் வரவுள்ளதால், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இளநீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. வட மாநிலங்களில் இளநீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.தேவையான இளநீரை வியாபாரிகளால் வெட்டிக்கொடுக்க முடிவதில்லை. எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை