வீட்டில் விபச்சாரம் செய்த மூவர் கைது
கோவை; கோவை கணபதி பாரதிநகரில் உள்ள ஒரு வீட்டில், விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவது தெரிந்தது. போலீசார் விபசார புரோக்கர்கள் பாரதி நகரை சேர்ந்த அருள்மணி, 45, சின்னவேடம்பட்டியை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார், 37 ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.