உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று நாட்கள் ஆதார் திருத்த முகாம்

மூன்று நாட்கள் ஆதார் திருத்த முகாம்

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டியில் மூன்று நாட்கள் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது. கருமத்தம்பட்டி அஞ்சல் அலுவலகம் மற்றும் அன்பு அறக்கட்டளை சார்பில், கருமத்தம்பட்டியில் மூன்று நாட்கள் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது. செப்., 3 முதல், 5 ம்தேதி வரை கருமத்தம்பட்டி - சோமனூர் ரோடு வெங்கடலட்சுமி மகாலில், காலை, 10:00 முதல், மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது. புதிதாக ஆதார் எடுப்பவர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது. செல்போன் எண் இணைத்தல், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை முகாமில் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !