புலிகள் கணக்கெடுப்பு பணி: வனச்சரகங்களில் துவக்கம்
வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஆறாவது இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி, நேற்று முதல் துவங்கியது. வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர், புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்திய அளவில் புலிகள் எண்ணிக்கை குறித்து கண்டறிய புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனச்சரகங்களிலும் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு, புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது,' என்றனர்.