உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை யு.பி.எஸ்.சி., உதவித்தொகை தேர்வு 

நாளை யு.பி.எஸ்.சி., உதவித்தொகை தேர்வு 

கோவை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி., உதவித்தொகை தேர்வு, மாவட்டத்தில்  நாளை ஆறு மையங்களில் நடக்கிறது. 1,547 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 10:00 முதல் 12:00 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வர்கள் காலை 9:30 முதல் 9:50 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக 20 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும். ஆறு முதன்மை கண்காணிப்பாளர்கள், ஆறு துறை அலுவலர்கள், 81 அறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி