மேலும் செய்திகள்
சுதந்திர தின விடுமுறை சுற்றுலா பயணியர் 'ஜாலி'
16-Aug-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைப்பகுதியில் அதிகளவு சுற்றுலாப்பயணியர் திரண்டனர். பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு, ஆழியாறு அணை, பூங்கா, கவியருவி ஆகியவை உள்ளன. இதனால், உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். மற்ற நாட்களை விட, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், சுதந்திர தினவிழா, கோகுலாஷ்டமி என கடந்த, 15ம் தேதி முதல் நேற்று வரை விடுமுறை என்பதால் மூன்று நாட்களும் சுற்றுலாப்பயணியர் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதனால், அவர்கள் குடும்பத்துடன், ஆழியாறு அணைப்பகுதியில் திரண்டனர். அணை அழகை ரசித்த சுற்றுலாப்பயணியர், கவியருவியில் குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் அருவியின் முன்பு குளம் போல தேங்கிய தண்ணீரில் சறுக்கு விளையாடி ஆனந்த குளியாடி மகிழ்ந்தனர்.சுற்றுலாப்பயணியர் கூட்டத்தால் ஆழியாறு அணைப்பகுதி திருவிழாக்கோலம் பூண்டது.
16-Aug-2025