உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோ-கோ போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடிய இரு பாலர் அணியினர்

கோ-கோ போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடிய இரு பாலர் அணியினர்

கோவை,: மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில் எம்.டி.என்., பியூச்சர் பள்ளியும், மாணவியருக்கான போட்டியில் சுகுணா பிப் பள்ளியும் 'சாம்பியன்ஷிப்' வென்றன.கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் வெல்பேர் அசோசியேசன் மற்றும் மூன்று ரோட்டரி சங்கங்கள் சார்பில் மாணவ, மாணவியருக்கான கோ-கோ போட்டிகள், சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளியில் இரு நாட்கள் நடந்தது.இதில், 24 பள்ளிகளை சேர்ந்த, 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவுகளில் தலா, 10 அணிகள் பங்கேற்றன. பல்வேறு போட்டிகளை அடுத்து ஆண்களுக்கான முதல் அரையிறுதியில், டி.கே.எஸ்., பள்ளி அணி, 15-7 என்ற புள்ளி கணக்கில் சி.ஆர்.ஆர்., பள்ளி அணியை வென்றது.இரண்டாம் அரையிறுதியில், சூலுார், எம்.டி.என்., பியூச்சர் பள்ளி அணி, 12-4 என்ற புள்ளி கணக்கில் டி.என்.ஜி.ஆர்., அணியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில், எம்.டி.என்., பியூச்சர் பள்ளி, 15-7 என்ற புள்ளி கணக்கில் டி.கே.எஸ்., பள்ளி அணியை வீழ்த்தி 'சாம்பியன்ஷிப்' பெற்றது. மாணவியருக்கான இறுதிப்போட்டியில், சுகுணா பிப் பள்ளி அணி, 17-14 என்ற புள்ளி கணக்கில், ஆதித்யா பள்ளி அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை