உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறி விதை, பழச்செடி இலவசம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

காய்கறி விதை, பழச்செடி இலவசம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

கோவை; கோவை மாவட்டத்தில், தோட்டக்கலை சார்பில், காய்கறி விதைகள், பழச்செடிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், 51 ஆயிரம் காய்கறி விதைத் தொகுப் புகள், 30 ஆயிரத்து 550 பழச்செடிகள் தொகுப்புகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. விதைத்தொகுப்புகள் 5,800 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. பழச்செடிகள் 30 ஆயிரத்து 550 வழங்கப்பட்டு உள்ளன. வீடுகளில் நடவு செய்ய ஏதுவாக, இடம் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் பெற்று பயனடையலாம். உழவர் செயலியில் பதிவு செய்து, tnhorticulture.tn.gov.inவலைத்தளத்தில் ஆதார் எண் பதிவேற்றம் செய்து வாங்கிக் கொள்ளலாம். அல்லது வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு நேரில் சென்றும் பதிவு செய்து வாங்கலாம். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன குடும்பங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். ஆதார் அல்லது குடும்ப அட்டை நகல்களுடன், அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம். ஆக., மாதம் முழுவதும் வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை