மருதமலை மலைப்பாதையில் இன்று வாகனங்களுக்கு தடை
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப்பாதையில், இன்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல, கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பல்வேறு திருப்பணிகள் நடந்து வருவதால், மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில், போதிய வாகனங்கள் நிறுத்த வசதி இல்லை. செவ்வாய்க்கிழமை (இன்று) அதிக பக்தர்கள் வருவார்கள். நெரிசலை தவிர்க்க, நாளை(இன்று)ஒருநாள் மட்டும் மருதமலை மலைப்பாதை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள், படிக்கட்டு பாதை வழியாகவும், கோயில் பஸ் மூலமாகவும், மலைமேல் உள்ள கோயிலுக்கு சென்று, சுவாமியை தரிசனம் செய்யலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.